Translate

வியாழன், மார்ச் 05, 2015

உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தி

  முகமது நசீது என்ற மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை (கைது செய்தது அவர்களது உள்நாட்டு விவகாரம்...,ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் நசீத் என்பது குறிப்பிடத்தக்கது.) பத்திரிக்கைகளில் படிக்க நேர்ந்த போது அவர் 2009-ஆம் ஆண்டு தனது அமைச்சரவை சகாக்களுடன் கடலுக்கடியில் சைகைகளின் மூலமும், வெண்ணிற அட்டைகளின் மூலமும் சுமார் அரை மணி நேரம் கூட்டம் நடத்தி உலகின் கார்பன் வெளிப்பாட்டினை குறைக்க முயற்சி எடுத்தவர்...என்ற நினைவு எனக்கு ஏற்பட்டது .
இதற்கு காரணம் கடல் மட்டத்தை விட ஏழு அடி உயரம் மட்டுமே அவர்களது நிலமட்டம் (வாழ்க்கை.....)
நமக்கெல்லாம் இது சாதாரண செய்திதான்....ஆனால் அவர்களுக்கு உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தியை எப்படியாவது உணர்த்த வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே....அந்த கூட்டம்...
அப்போது எனக்கு இது ஒரு விளம்பரத்திற்காக என்று கூட எண்ணினேன் ஆனால் இப்போது ஏற்படும் பருவநிலை மாற்றம்...அவர்களைப் போன்றவர்கள் நிலை...... உண்மையில் பரிதாபம் தான் ......
பரிதாபப்பட இப்போது நாம் உள்ளோம்....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக