Translate

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

மழைக்காலத்தை சமாளிக்க எளிய வழிகள் பத்து.........

மழைக்காலத்தை சமாளிக்க எளிய வழிகள் பத்து.
(சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து )
இநத அடைமழைக்காலத்தில் வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, ஃப்ளு சுரங்கள் மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. உணவிலும் வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம்.
1. நன்கு தரதரவென காய்ச்சி அருந்திய நீரை மட்டுமே. இளவெதுவெதுப்பான சூட்டோடு மட்டுமே பருகுங்கள்
2. இளவெதுவெதுப்பான நீரை மட்டும் குளிக்க பயன்படுத்துங்கள்.
3. ஆவியில் வெந்த எளிதில் சீரணிக்க கூடிய இட்லி, இடியாப்பம், சோறு, புட்டு, பொங்கல், சாப்பிடவும். கோதுமைச் சப்பாத்தியும் கொடுக்கலாம். மிளகுதூவிய கிழங்கு மதியம் மட்டும் கொஞ்சமாக எடுக்கலாம். பிற மாவுப்பண்டங்கள் வேண்டாம். மிளகு, பூண்டு, சீரகம் போட்ட ரசம் சோறு நல்லது.
4. நோய் எதிர்ப்பாற்றலை உடலில் அதிகரிக்க காரம் தேவைப்படும் இடத்திலெல்லாம் மிளகுத் தூள் பயன்படுத்துங்கள். அன்னாசிப்பூ எனும் star anise-ஐ குருமா போன்ற உணவில் போட்டு சாப்பிடவும். தேநீரில் இலவங்கப்பப்ட்டை, துளசி இலை போட்டு தேநீர் அருந்தலாம்.
5. நிலவேம்புக் குடிநீர் வீட்டில் கண்டிப்பாக இருக்கட்டும். இந்த பொடியைப் போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60 மிலியாக்க் குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள். 6 வய்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30மிலி கொடுக்கலாம். 3-6 வயதில் 15-30மிலி கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் எப்போதும் கிடைக்கும்.
6. செஞ்சில் சளி கட்டி இருமலுடன் துன்பப பட்டால், துளசி (ஒருகைப்பிடி அளவு), வெற்றிலை( 2 இலை), மிளகு( 4 எண்ணிக்கை), கற்பூரவல்லி(ஒருகைப்பிடி அளவு) –இதனை போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60மிலியாக குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள்.
7. வெறும் தரையில் படுக்க வேண்டாம். படுக்கை தலையணை உறையை வெயில் தெரியும் போது வெயிலில் போட்டு எடுங்கள். ஈரமான நாட்களில் ஒவ்வாமைத் தும்மல் வர மிக முக்கிய காரணம் ஈரம் பாய்ந்த துவைக்காத தலையணை உறை என்பதை மறக்க்க் கூடாது
8. குழந்தைகளை காது, தலைப்பகுதியை அணைத்த (குரங்கு குல்லா மாதிரி) ஆடை அணிவியுங்கள். இருசக்கர வாகன முன் பகுதியிலோ, சாலையைப் பார்த்த படியோ குழந்தையை உட்கார வைக்காதீர்கள்.
9. வயிற்றுப் போக்கை நிறுத்த கறிவேப்பிலை, சித்த மருந்துகளான சுண்டை வற்றல் பொடி, தயிர்சுண்டிச் சூரணம் பயனளிக்கும். கூடவே உடலில் நீர்த்துவம் குறைந்திடாது இருக்க உப்பு, பனைவெல்லம் கலந்த நீர், இள நீர், நீர்த்த மோர், அருந்துங்கள்.
10. சுரம் 2 தினங்களைத் தாண்டி படிப்படியாக அதிகரித்தாலோ, தோலில் சிவந்த படைகள் இருந்தாலோ, சுரத்தில் துவளும் சூழல் வருவது போலிருந்தாலா, அருகாமையில் உள்ள குடும்ப மருத்துவரை தாமதிக்காது அணுகுங்கள்.
(முடிந்தவரை நிறைய நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.)

வியாழன், மார்ச் 05, 2015

புவி வெப்ப மாதல் ,பசுமை இல்ல வாயு ,ஓசோன் ஓட்டை

புவி வெப்ப மாதல் ,பசுமை இல்ல வாயு ,ஓசோன் ஓட்டை
**************************************************************************************
அப்படின்னு எல்லாம் சொல்றாங்களே அது உலக பிரச்சினையாமே , அதுக்கு நாம என்ன செய்ய முடியும் ?.......
இது நியாயமான கேள்வி .....
1. நாம பக்கத்து அறைக்கு போகும் போது மறக்காம எல்லா சிவிட்சும் நிறுத்தியிருக்கா அப்படின்னு பார்த்துட்டு போகணும்.
2.தேவையில்லாத இடங்களில் எரியும் விளக்குகளுக்கு ஒய்வு கொடுக்க வேண்டும்
3.கடை வீதிக்கு போனாலே கையில் பை ஒன்றை எடுத்து செல்ல வேண்டும் ....கடைகாரர் கொடுக்கும் நெகிழிப்பைகளை வேண்டாம் என்று மறுக்க வேண்டும்
3.நாம பயன்படுத்தும் எழுதுகோல் மையூற்று (inkpen )
ஆக இருந்தால் சாலச்சிறந்தது ....ஏனெனில் refil கள் மறு சுழற்சிக்கு
அதிகம் பயன்படாது....
4. மிதிவண்டி மற்றும் நடராஜா வாகனங்களில் செல்வது நமது
உடலுக்கு மிக நல்லது
5.தண்ணீர் வீணாவதை நம்மால் முடிந்த அளவு குறைக்க வேண்டும்

இவை சிலதான்
ரொம்ப எளிதுதான் இதுல ஏதாவது ஒன்ற நாம கடை பிடிக்காம இருந்திருப்போம் அதை கடைபிடிக்க முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா?
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம் .

டோடோ அழிந்து போனதற்கு காரணம்

டோடோ என்ற பறவை கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் வாழ்ந்து வந்தது. இதற்கு இறக்கைகள் கிடையாது ,தரையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. ஒரு மீட்டர் உயரம் உடையது .இது மெதுவாகத்தான் நடந்து செல்லும் .இதற்கு என்று உணவுவலை மேலாளர் (இதை உண்ணக்கூடிய விலங்கு) இல்லை ...அதனால் இது சுதந்திரமாக தன் இனத்தை ஒருமுறைக்கு ஒரே ஒரு முட்டை மட்டுமே இட்டு பெருக்கி வாழ்ந்து வந்தது ....ஆனால் அத்தீவில் வெளியூர்காரர்கள் காலூன்றிய போது நாய்...பூனை போன்றவை உடன் வந்ததால் அவை டோடோவை உண்ணத் தொடங்கின ,மனிதனும் தன் பங்கிற்கு உண்டான் .....
டோடோ அழிந்து போனதற்கு காரணம் இயற்கை அத்தீவில் இல்லாமல் செய்திருந்த நாய்...பூனை போன்றவை அங்கே வந்ததுதான் காரணம் .....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தி

  முகமது நசீது என்ற மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை (கைது செய்தது அவர்களது உள்நாட்டு விவகாரம்...,ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் நசீத் என்பது குறிப்பிடத்தக்கது.) பத்திரிக்கைகளில் படிக்க நேர்ந்த போது அவர் 2009-ஆம் ஆண்டு தனது அமைச்சரவை சகாக்களுடன் கடலுக்கடியில் சைகைகளின் மூலமும், வெண்ணிற அட்டைகளின் மூலமும் சுமார் அரை மணி நேரம் கூட்டம் நடத்தி உலகின் கார்பன் வெளிப்பாட்டினை குறைக்க முயற்சி எடுத்தவர்...என்ற நினைவு எனக்கு ஏற்பட்டது .
இதற்கு காரணம் கடல் மட்டத்தை விட ஏழு அடி உயரம் மட்டுமே அவர்களது நிலமட்டம் (வாழ்க்கை.....)
நமக்கெல்லாம் இது சாதாரண செய்திதான்....ஆனால் அவர்களுக்கு உலக நாடுகளிடம் வெப்பமாதல் குறித்த செய்தியை எப்படியாவது உணர்த்த வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே....அந்த கூட்டம்...
அப்போது எனக்கு இது ஒரு விளம்பரத்திற்காக என்று கூட எண்ணினேன் ஆனால் இப்போது ஏற்படும் பருவநிலை மாற்றம்...அவர்களைப் போன்றவர்கள் நிலை...... உண்மையில் பரிதாபம் தான் ......
பரிதாபப்பட இப்போது நாம் உள்ளோம்....
-சேதுராமன் இராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.