Translate

வியாழன், அக்டோபர் 04, 2012

மூட விரும்பும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவு


சென்னை: சரியாக செயல்படாத பொறியியல் கல்லூரிகளை மூட விரும்பும் நிர்வாகத்தினர் அதுகுறித்து டிசம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது.
அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் புதிய படிப்புகளை தொடங்க விரும்பினாலோ அல்லது ஏற்கனவே உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினாலோ ஏ.ஐ.சி.டி.இ.க்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யே அறிவிப்பு வெளியிடும்.
ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என கடந்த ஜுன் மாதம் நாடு முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது 324 கல்லூரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 71 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும்.

புதிய படிப்புகள், இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விண்ணப்பிப்பது குறித்து கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், சரியாக செயல்படாத பொறியியல் கல்லூரிகளை மூட விரும்பும் நிர்வாகத்தினர் அதுகுறித்து டிசம்பர் மாதத்திற்குள் தங்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
புதிய படிப்புகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த விண்ணப்பிப்பது போன்று கல்லூரிகளை மூடவிரும்பும் நிர்வாகத்தினரும் அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால் கோரிக்கையை பரிசீலித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நலன்கருதி முடிவு எடுக்கவும் சற்று கால அவகாசம் கிடைக்கும் என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், கல்லூரி நிர்வாகத்தினர் அவசர அவசரமாக வேறு ஒரு நிர்வாகத்திடம் கல்லூரியை விற்றுவிடுவதையும், வேறு ஏதேனும் பயன்பாட்டிற்காக கல்லூரியை லீசுக்கு விடுவதையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர்.
                                                                                                           நன்றி--தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக