Translate

திங்கள், அக்டோபர் 01, 2012

பொறித்த உணவுகளை அதிகம் பயன்படுத்தும் இந்திய மக்கள்

பொறித்த உணவுகள் அதிகம் விரும்புபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!
சென்னையில் உள்ள பெரும்பாலான நகர்ப்புற மக்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவு பொருட்களையே அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பொறித்த உணவு பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்வதால் கொழுப்பு அதிகரித்து நீரிழிவு நோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னை மற்றும் கொச்சியில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி  74% நகர்ப்புற இந்தியர்கள் இருதய நோயும் தாக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் 30 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிக பாதிப்புக்குட்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் பொறித்த உணவு பொருட்களில் செலுத்தும் நாட்டம் பழங்கள் மற்றும் தானியங்களில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. எனவே மனிதர்களின் ஆயுள் குறைய அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு  கூறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக