Translate

புதன், ஆகஸ்ட் 29, 2012

திட்டப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஆக.,29: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்டப் பணியாளர் (I), (II) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: திட்டப் பணியாளர் (I) - பி.இ.,(கம்யூட்டர் சயின்ஸ்) அல்லது எம்சிஏ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு குறைந்தபட்சம் 1 வருடம் சாப்ட்வேட் டெவலப்மென்ட் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வி.பி., டாட் நெட், எச்.டி.எம்.எல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். திட்டப் பணியாளர் (II) - எம்.பி, எம்.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ்) படிப்புடன் 1 வருடம்  சாப்ட்வேட் டெவலப்மென்ட் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வி.பி., டாட் நெட், எச்.டி.எம்.எல் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், தங்களை பற்றிய சுயவிவரம், கல்வி சான்றிதழ்கள், பணிஅனுபவம் போன்றவை இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் அறிய http://www.annauniv.edu/pdf/recru_ctdt_1.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக