Translate

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு-ஆகஸ்ட் 12 வரை இடம் பெற்றவர்கள் 98,653 பேர்

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு செயல்பாட்டில், ஆகஸ்ட் 12 வரையான நிலவரப்படி, 98 ஆயிரத்து 653 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அழைக்கப்பட்ட 1,33,702 மாணவர்களில், மொத்தம் 34,701 மாணவர்கள் வரவில்லை. வந்தும், பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 347. அந்த வகையில், 98 ஆயிரத்து 653 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 12ம் தேதி மட்டும் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,643. அவர்களில் வராதவர்கள் 1,932. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 12. இறுதியாக இடம் பெற்றவர்கள் 3,699.
வராதவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த 6 நாட்களாக வராதவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் 30%க்கும் மேலாக உயர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது.
                                                                                                     COURTESY- DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக